தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - ooty

நீலகிரி: குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

By

Published : May 14, 2019, 1:40 PM IST

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனால்,வனப்பகுதியில் வாழ்ந்துவரும் காட்டு விலங்குகளுக்கு உணவு தண்ணீரின்றி தவித்துவருவதால் அவைகள் குடியிருப்புப் பகுதிகளையும் விவசாய நிலங்களையும் தேடிவருகின்றன.

இந்நிலையில் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள், குன்னூர் அருகேயுள்ள கொலக்கொம்பை டெரேமியா பகுதியில் நுழைந்தன. அந்தப் பகுதியில் ராமசந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மேலும், காட்டு யானைகள் தற்போது அதே பகுதியில் உலா வருவதால், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பொதுமக்களும் விவசாயிகளும் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.


.

ABOUT THE AUTHOR

...view details