தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடமான் கறி சமைத்த நான்கு பேர் கைது..! ஒருவர் தலைமறைவு..

நீலகிரி : குன்னுார் அருகே வீட்டில் கடமான் கறி சமைத்த ஐந்து பேரில் நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

By

Published : May 18, 2019, 4:10 PM IST

கறி சமைத்தவர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குந்தா வனச் சரகத்திற்குட்பட்ட பெள்ளாதிகோம்பை கிராமத்தில் ஒரு வீ்ட்டில் கடமான் கறி சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனசரகர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேர்

அப்போது, ஒரு வீட்டில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கடமானின் தலை, தோல், கால்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக பெள்ளாதிகோம்பை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சரவணன், ரங்கசாமி, ரமேஸ், நாகேஷ் ஆகிய ஐந்து நபர்களில் நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கிருஷ்ணன் என்பவர் தலை‌மறைவாகிவிட்டார். மேலும், தலைமறைவாக உள்ள கிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details