தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 9:40 AM IST

ETV Bharat / state

கர்ப்பமான பசுவை மீட்ட தீயணைப்பு துறை!

நீலகிரி: குன்னூரில் 60 அடி உயரத்தில் இருந்த கட்டட இடைவெளிக்குள் விழுந்த கர்ப்பமான பசுவை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

கர்ப்பிணி பசு மீட்பு
கர்ப்பிணி பசு மீட்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மௌண்ட் பிளசன்ட் பகுதியில் பிரமாண்ட அளவில் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மூன்று அடுக்கு மாடி உயரத்திலிருந்து இரு கட்டடங்களுக்கு நடுவே சூரியன் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்ட குறைந்த இடைவெளியில் சுமார் 60 அடி பள்ளத்தில் கர்ப்பமான பசு ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

உடனே கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அலுவலர் மோகன் தலைமையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி உயரத்திலிந்து, கயிறு கட்டி தரைத்தளத்தில் உள்ள வீட்டு ஜன்னல் வழியாக மாட்டை வீட்டிற்குள் கொண்டு சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி இந்த பசுவை உயிரோடு மீட்டு முதலுதவி அளித்தனர்.

கர்ப்பிணி பசு மீட்பு

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details