நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பெய்த மழையால் யானைகள் விரும்பி உண்ணும் பலா பழங்கள், புல் வகைகள் செழிப்பாக வளர்ந்து காணப்படுவதால் அவற்றை தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
சமவெளிப் பகுதிகளில் போதுமான உணவு கிடைக்காததால் மலைப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, யானைக் கூட்டங்கள் வரத் தொடங்கிய நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று அரிசி போன்ற உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது.