தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்ய வேண்டாம்' - வனத்துறை அறிவுரை! - Niligris District News

நீலகிரி: கெத்தை சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சாலையை மறித்து நிற்கும் யானை

By

Published : Nov 10, 2019, 11:33 PM IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கோவை சாலையில் உள்ள கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்கள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளன. தமிழ்நாடு - கேரள எல்லையையொட்டி இந்தப் பகுதிகள் இருப்பதால், சமீப காலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து கெத்தை வனப்பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் நடுவே யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி எடுத்துச் சென்று, யானைகள் சென்றவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சாலையை மறித்து நிற்கும் யானை

இது குறித்து கூறிய வனத்துறையினர், 'இப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். யானைகளை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது' என்றனர்.


இதையும் படிங்க:சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி!

ABOUT THE AUTHOR

...view details