தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக நிர்வாகி அடித்து கொலை - காய்காறி வியாபாரி கைது

நீலகிரியில் திமுக நிர்வாகியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Jul 27, 2021, 10:33 AM IST

திமுக நிர்வாகி செங்கலால் அடித்து கொலை
திமுக நிர்வாகி செங்கலால் அடித்து கொலை

நீலகிரி:அப்பர் குன்னூர் டானிங்டன் மூலக்கடையில் வசித்து வந்தவர் நடராஜன் (68). இவர் திமுக கிளை செயலாளராக இருந்துள்ளார். இவரின் கடைக்கு அருகில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் முத்துக்குமார் (65).

இருவருக்கும் கடையின் வெளியே பொருள்களை வைத்து விற்பனை செய்வதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 25ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நடராஜனின் நெற்றியின் மீது முத்துக்குமார் செங்கலால் தாக்கினார்.

திமுக நிர்வாகி கொலை

இதில் சம்பவ இடத்திலேயே நடராஜன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பர் குன்னூர் காவல் துறையினர், நடராஜனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முத்துகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி

ABOUT THE AUTHOR

...view details