நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி, மார்க்கெட் பகுதியில் 910 கடைகள் உள்ளன. தற்போது திடீரென வாடகை மறுவரையறை எனக்கூறி பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியினர் மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கு எவ்வித நலனும் செய்யவில்லை என அங்குள்ள கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 23ஆம் தேதி முதல் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவதாக வியாபாரிகள் தீர்மானம் செய்துள்ளனர்.