தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2019, 2:21 PM IST

ETV Bharat / state

குன்னூரில் களைகட்டும் இரண்டாம் சீசன் - குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்!

நீலகிரி: மழையின் சீற்றம் குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

coonoor-tourist-crowd-visit-increases

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் சீற்றம் குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல்கட்ட சீசனும்; அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசனும் நிலவி வருகிறது. முதல் கட்ட சீசனில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதால், சுற்றுலாத்துறை சார்பாக கண்காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குவியும் சுற்றுலாப் பயணிகள்

தற்போது இரண்டாம் கட்ட சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் மழையின் சீற்றமும் குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குன்னூர் போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் குன்னூர் டால்பின் நோஸ், லேம்ஸ் பாறை ஆகிய இடங்களில் இயற்கைக் காட்சியை ரசிக்கவும், இதமான கால நிலையை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: நம்ம தமிழ்நாடு : தமிழ் மொழியில் கெத்து காட்டும் டைட்டன் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details