தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2019, 7:18 PM IST

ETV Bharat / state

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளதால் அதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

kurinji flower

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மலரும். ஸ்டாபிலான்தஸ் மினியேச்சர் தாவர இனத்தைக் கொண்ட இந்த குறிஞ்சி மலர்கள் குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரியில் தற்போது பூத்துள்ளது. அது அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதேபோல், குறிஞ்சி மலர் கடந்த மாதம் லேம்ஸ்ராக், கல்லட்டி, கோத்தகிரி மலைப் பகுதிகளில் மலர்ந்துள்ளது. பூங்காவில் குறிஞ்சி மலர்களின் நாற்றுக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் இலைகள் அடர்த்தியாக உள்ளதால் வீடுகளில் வேலியாக வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் குறிஞ்சி மலர் நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜெகதளா அருகேயுள்ள தேன்மலை, குறிஞ்சி மலைப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

மேலும் படிக்க:சுபமுகூர்த்தம் தினம் எதிரொலி - பூக்களின் விலை அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details