தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2019, 10:06 AM IST

ETV Bharat / state

மீண்டும் தொடங்கிய குன்னூர்-உதகை மலை ரயில் சேவை!

நீலகிாி: கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குன்னூர்-உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

train

நீலகிாி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையால் மண்சாிவு ஏற்பட்டு சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மலை ரயில் பாதைகளிலும் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுவதால் தண்டவாளங்கள் சேதமடைந்து அப்பகுதியிலும் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி குன்னுாா் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மழையின் காரணமாக பாறைகளுடன் மண்சாிவு, மரங்கள் விழுவதினால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில்கள் சேவை இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

இதே போன்று குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும் மலை ரயில் சேவையும் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மழையின் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து குன்னூர்-உதகை, மேட்டுப்பாளையம்-குன்னூர் ஆகிய வழித்தடங்களில் மலை ரயில்களின் சேவைகள் மீண்டும்தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர்-உதகை மலை ரயில்

மேலும் படிக்க: நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் காவல் கண்காணிப்பு தீவிரம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details