நீலகிாி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையால் மண்சாிவு ஏற்பட்டு சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மலை ரயில் பாதைகளிலும் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுவதால் தண்டவாளங்கள் சேதமடைந்து அப்பகுதியிலும் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி குன்னுாா் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மழையின் காரணமாக பாறைகளுடன் மண்சாிவு, மரங்கள் விழுவதினால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில்கள் சேவை இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.