நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில், கடந்த இரண்டு தினங்களாக குட்டியுடன் தாய் யானை சுற்றிவருகிறது. இதனால் அவ்வப்போது இந்த யானைகள் சாலையில் உலா வருகின்றன.
இதனால் மலைப் பாதையில் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று பரலியார் அருகே மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானை வாகனங்களுக்கு முன்பு நின்றதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர். மேலும் அவ்வழியே வந்த வாகனங்கள் பல பின்னோக்கி இயக்கப்பட்டன.