நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு கிராமங்களில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், வன விலங்குகள் மக்கள் நடமாடும் பகுதியில் முகாமிட்டுவருகின்றன.
இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைப் புலி உறுமும் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்ட தோட்ட உரிமையாளர் வனத் துறைக்குத் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது சிறுத்தைப் புலி ஒன்று, கம்பியில் சிக்கி இருப்பதைக் கண்டனர்.