தமிழ்நாடு

tamil nadu

மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - புதைத்தவர்கள் யார்?

நீலகிரி: கோத்தகிரி அருகே மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை புதைத்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

By

Published : Jan 1, 2020, 9:15 AM IST

Published : Jan 1, 2020, 9:15 AM IST

infant baby
infant baby

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வழக்கம்போல தேயிலை பறிக்க தோட்டத்துக்கு தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது கொலை செய்து புதைக்கப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details