நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாள்களாக அரிய வகையை சார்ந்த கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறது.
இந்நிலையில் கோத்தகிரி உயிலட்டி நீர் வீழ்ச்சி அருகே வலம் வந்த இந்த கருஞ்சிறுத்தைகள் அருகிலுள்ள நாய்களை பிடித்துச் செல்ல முயற்சித்தன. அப்போது தேயிலை தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தைகளைக் கண்ட பணியாளர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.