நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தக் கரடிகள் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
இதனால் அவ்வபோது மனிதர்களை கரடிகள் தாக்கும் சூழல் உருவாகிறது. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள லாஸ்ஃபால்ஸ் தேயிலை தோட்டத்திற்குள் பகல் நேரங்களில் கரடி ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.