தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 4:12 PM IST

ETV Bharat / state

நீலகிரியில் திருமணத்தை நிறுத்தி பெண்: மாப்பிள்ளை குறித்த ஆடியோ வெளியீடு

நீலகிரி: திருமணத்தின்போது காதலன் வருவதாக திருமணத்தை நிறுத்திய பெண், மாப்பிள்ளை குறித்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

நீலகிரியில் திருமணத்தை நிறுத்தி பெண்
நீலகிரியில் திருமணத்தை நிறுத்தி பெண்

நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 29ஆம் தேதி மஞ்சூர் அருகேயுள்ள மட்டகண்டி கிராமத்தில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தன் காதலன் வருவதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து கடந்த இரண்ட நாட்களாக மணப்பெண் குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அப்பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை தவறானவர். எனவே எனக்கு காதலன் இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினேன். தற்போது என் பொற்றோர் உடன் இருக்கிறேன். என்னை பற்றி யாரும் தவராக பேச வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: காதலன் வருவான் என்னை கூட்டிப்போக...' தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

ABOUT THE AUTHOR

...view details