தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொய் மலர்கள் ஏற்றுமதியில் பின்னடைவு... மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை - Impact of farmers on recession in the export of koi flowers

நீலகிரி: 144 தடை காரணமாக 10 லட்சம் கொய் மலர்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்து மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொய்மலர் விவசாயி சந்தியா
கொய்மலர் விவசாயி சந்தியா

By

Published : Mar 31, 2020, 2:31 PM IST

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய பண பயிராக விளங்குவது தேயிலையாகும். சுமார் 60 விழுக்காடு விவசாயிகள் தேயிலையை விவசாயம் செய்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். இதன் காரணமாக பல விவசாயிகள் தேயிலைக்கு மாற்று பயிராக கொய் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கூக்கல் தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கொய் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய் மலர்கள் பசுமை குடில்கள் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் சில விவசாயிகள் கார்னீசியன் மற்றும் ஜெர்பரா என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், பல வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் மேடைகளை அலங்கரிக்கவும், பொக்கேகளை தயாரிக்கவும் பயன்படுத்தி வருகிறது.

கண் கவரும் கொய் மலர்கள்

இது குறித்து கொய் மலர் விவசாயி சந்தியா கூறுகையில், “கரோனா பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கபட்டுள்ள 144 தடை உத்தரவால், சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொய் மலர்களை பறிக்க ஆட்கள் வராததாலும், அறுவடை செய்யும் மலர்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததாலும், கொய் மலர்கள் பசுமை குடில்களில் அழுகி வருகின்றன.

கொய்மலர் விவசாயி சந்தியா பேட்டி

இதனால், நாள் ஒன்றுக்கு 5 லட்சம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 10 லட்சம் கொய் மலர்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கொய் மலர் விவசாயிகளின் வங்கிக் கடனை அரசு ரத்து செய்வதுடன் நிவாரண நிதியும் வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:பிழைப்புக்காக வந்த மக்கள் மீது ரசாயனத்தைப் பீய்ச்சி அடித்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details