தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2020, 9:21 PM IST

ETV Bharat / state

குடும்பப் பிரச்னையில் இளைஞர் வெட்டிக்கொலை - காவல்துறை விசாரணை!

தஞ்சை: பூதலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞரை உறவினர் அறிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth-murder-over-family-issue-police-investigation
youth-murder-over-family-issue-police-investigation

தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த துருசு பட்டியை சேர்ந்தவர் வீரையன்(37). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, வீட்டின் மேல் கல் விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது, அவரது உறவினர் குருநாதன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வீரையனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த வீரையன் மனைவி, அவரை மீட்டு அங்குள்ளவர்களின் உதவியோடு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வீரையன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரையன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கொலை வழக்கில் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details