தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானலும் முதல்வராகலாம்’ - வைத்தியலிங்கம் - குடிமராமத்து பணி

தஞ்சாவூர்: அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானலும் முதல்வராகலாம் என பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஐம்பதிற்கும் மேற்பட்ட தொண்டர்கள்  அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார்.

ADMK Deputy Coordinator
ADMK Deputy Coordinator

By

Published : Jan 25, 2020, 10:53 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்103 ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய வைத்தியலிங்கம், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணியை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், அதிமுகவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம். அதற்கு எடப்பாடியும், ஓபிஎஸ்சும் தான் சாட்சி எனத் தெரிவித்தார்.

’எங்கள் ஆட்சியில் யார் வேண்டுமானலும் முதல்வராகலாம்’

இந்நிகழ்ச்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details