தமிழ்நாடு

tamil nadu

ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட டீக்கடை ஊழியர் - காவலர்; வீடியோ வைரல்

By

Published : Apr 29, 2020, 6:51 PM IST

தஞ்சாவூர்: டீக்கடை ஊழியரும் காவலரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

டீக்கடை ஊழியரும் காவலரும் தாக்கிக் கொள்ளும வீடியோ
டீக்கடை ஊழியரும் காவலரும் தாக்கிக் கொள்ளும வீடியோ

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்பவர் தீபக். இவர் கடந்த 17ஆம் தேதி திருப்பனந்தாள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து சென்றபோது அங்கு சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த நந்தவர்மன் என்பவரிடம் இங்கு டீ விற்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கடைசியாக காவலர் தீபக் கீழே கிடந்த கட்டையால் நந்தவர்மனை கடுமையாகத் தாக்கினார்.

டீக்கடை ஊழியரும் காவலரும் தாக்கிக் கொள்ளும வீடியோ

இதனையடுத்து அங்கு வந்த திருப்பனந்தாள் காவல் துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்வர்ணலதா மட்டும் இல்லையென்றால்....

ABOUT THE AUTHOR

...view details