தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரி அக்கட்சியின் மண்டல அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் விவேகானந்தன் கூறும்போது, "மத்திய, மாநில அரசுகள் அரசு வேலையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.