தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2020, 4:51 PM IST

ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

தஞ்சாவூர்: இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் காவல் துரையினர் சாக்கோட்டை சுற்றுப்புற பகுதியில் ஆய்வுசெய்தனர். அப்போது தமிழரசு, செல்வம் ஆகியோர் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மதிப்பிலான கஞ்சா பொருள்களைக் கைப்பற்றினர்.

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

மேலும் இவர்களது தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு இளைஞர்கள் சிலர் கஞ்சா பொட்டலம் கேட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நாச்சியார் கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details