தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை - காவல் துறை விசாரணை! - தமிழ் குற்றச்செய்திகள்

தஞ்சை: திருவையாறு அருகே லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

truck-driver-hacked-to-death-police-investigation
truck-driver-hacked-to-death-police-investigation

By

Published : Aug 31, 2020, 9:29 PM IST

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேவுள்ள பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சேகர் (38). இவருக்கு திருமணமாகி கலையரசி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஆக. 31) மாலை சுமார் 7 மணியளவில் சேகர், மணக்கரம்பை பைபாஸ் சாலையில் அருவாளால் வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் சித்திரவேல் மற்றும் காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வாகன உரிமம் இல்லாமல் வந்த 150 வாகனங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details