தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா! - Tree Planting

தஞ்சாவூர்: நம்மாழ்வார் நற்பணி மன்றம், நகராட்சி சார்பில் கும்பகோணம் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா தஞ்சாவூர் நம்மாழ்வார் நற்பணி மன்றம் Tree Planting Ceremony at Kumbakonam Municipality Kumbakonam Municipality Tree Planting Thanjavu

By

Published : Sep 11, 2019, 9:16 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நம்மாழ்வார் நற்பணி மன்றம், நகராட்சி, தன்னார்வு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தினர். மரக்கன்றுகள் நடும் விழாவை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன் மகாமகம் கலையரங்கில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி தொடங்கிவைத்தார்.

மரக்கன்றுகள் நடும் விழா

இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் சாம்பசிவம், சுகாதாரத் துறை அலுவலர் பிரேமா, பொறியாளர் விஸ்வேஸ்வரன், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மேலும், இவ்விழாவில் வேப்பமரம், புங்கமரம், வில்வமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நட்டுவைத்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details