தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து பணியாளர்கள் களப்பணி - போலீசாருடன் இணைந்து களப்பணி

தஞ்சை:போக்குவரத்து பணியாளர்கள் போலீசாருடன் இணைந்து களப்பணி மேற்கொள்கின்றனர்.

tnctc-worker-volunteers-work-in-traffic-and-safety-field
tnctc-worker-volunteers-work-in-traffic-and-safety-fieldtnctc-worker-volunteers-work-in-traffic-and-safety-field

By

Published : Apr 6, 2020, 12:58 PM IST

திருவையாறு அருகே கடுவெளி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தற்போது மருவூர் போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு பணிகளையும், ரேஷன் கடைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் .

தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களையும் காவலர் பணியில் தன்னார்வலர்களான பணி செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அனுமதியுடன் மருவூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன், காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் திருவையாறு கடுவெளி போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடங்ததுனர்கள் 10 பேரை மருவூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போக்குவரத்து சரி செய்யும் பணியிலும் ,ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் காவலர்களின் பணி சற்று குறைந்துள்ளதாகவும், இது போல் எங்களுக்கு மேலும் பல தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும், அப்படி பணி செய்ய தயாராக இருப்பவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் மருவூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் சத்தியமங்கலம்!

ABOUT THE AUTHOR

...view details