கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வீரடிப்பட்டி பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் அரங்கசாமி (42), விற்பனையாளர் சவுந்தரராஜன் (33), ஓட்டுநர் சக்திவேல் (30), ரெங்கராஜ் (24) ஆகிய நால்வரும் திருவோணம் பகுதிகளில், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்கள் அனைத்தும் காலியாகி உள்ளன. இதனால், நால்வரும் வீரப்பட்டியில் உள்ள மதுபானக் கடையை திறந்து, மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக, சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
இதைக் கண்ட அப்பகுதியினர் இது குறித்து திருவோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் டேவிட் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைக் கண்ட ஓட்டுநர் சக்திவேல், ரெங்கராஜ் ஆகிய இருவரும் தப்பிச் சென்றனர்.