தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் திருவையாறு தாலுகாவில் 19 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
திருவையாறில் மூன்று வீடுகளும், திருப்பழனத்தில் ஒரு வீடும், கல்யாணபுரம் 1ஆம் சேத்தியில் இரண்டு வீடுகளும், கல்யாணபுரம் 2ஆம் சேத்தியில் ஒரு வீடும், கீழத்திருப்பூந்துருத்தியில் இரண்டு வீடுகளும், ராஜேந்திரத்தில் ஒரு வீடும், திருச்சோற்றுத்துறையில் இரண்டு வீடுகளும், கருப்பூரில் ஒரு வீடும், நடுக்காவேரியில் ஒரு வீடும், மேலத்திருப்பூந்துருத்தியில் நான்கு வீடுகளும் மொத்தம் 17 கூரை வீடுகளும், இரண்டு ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமாகின.