தஞ்சாவூர் மாவட்டம் கீழ புனவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32), சக்குபாய் (70), பிரகாஷ் என்பவரது மகன்கள் அகிலேஷ் (12), பரணீஸ் (10) ஆகிய 4 பேர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர்.
அப்போது அரசூர் அருகே சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பரணீஸ் காயத்துடன் உயிர் தப்பினார்.