தமிழ்நாடு

tamil nadu

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் மீன்பிடித் தொழில் முடக்கம்

By

Published : Jan 27, 2020, 12:15 PM IST

தஞ்சாவூர்: தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதனால், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Fishermen
Fishermen

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை பககுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. நாட்டுப் படகின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக தஞ்சை கடற்கரையையொட்டிய பகுதிகளில் காரைக்கால், பாண்டிச்சேரி பகுதி மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரேஸ் மடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால், கடலில் மீன்வளம் குறைந்து போவதோடு நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் விரித்து வைத்திருக்கும் வலைகளையும் இந்த விசைப்படகுகள் அறுத்து செல்கின்றன.

அதனோடு வலைகளை இழந்து தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரணமாக ஒரு வலையின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதால் புதிதாக வலை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வலைகள் இல்லாததால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணீர் வடிக்கும் தஞ்சை மீனவர்கள்

அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அனைத்து மீனவர்களும் ஒன்றுதிரண்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சவால் வேண்டாம்... களத்தில் இறங்குங்கள்' - கொங்கு ஈஸ்வரனுக்கு விவசாயிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details