தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விற்றது கன்றுக்குட்டி - கிடைத்தது கறவை பசு: தஞ்சாவூரில் நெகிழ்ச்சி சம்பவம் - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: கன்றுக்குட்டி விற்று கரோனா நிதியுதவி வழங்கிய கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் கறவை பசு வாங்குவதற்கான ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விற்றது கன்றுகுட்டி - கிடைத்தது கறவை பசு
விற்றது கன்றுகுட்டி - கிடைத்தது கறவை பசு

By

Published : Jun 13, 2021, 1:33 AM IST

தஞ்சாவூரை அடுத்த ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்று தற்போது கூலி வேலை செய்துவருகிறார்.

இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பிரசாந்த் ஆட்டோமொபைல் பொறியியல் படித்துள்ளார். இளைய மகன் சஞ்சய் 12ஆம் வகுப்புப் படித்துள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது மகன் கல்வி செலவுக்காகத் தனது வீட்டில் 10 ஆண்டுகளாக ஆசையாக வளர்த்துவந்த கன்றுக்குட்டியை விற்று, அதில்வந்த ரூ.6,000 வருமானத்தை கரோனா நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் வழங்கினார்.

இதனையடுத்து நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு உதவிகளைசெய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஒரத்தநாடு தாசில்தார் சீமான் ரவிசந்திரனின் வீட்டிற்குச் சென்று சால்வை அணிவித்து பாராட்டி விவரங்களைக் கேட்டார். அதற்கு அவர் தான் பிரதிபலன் பார்க்காமல் இந்த நிதியுதவி செய்ததாகத் தெரிவித்தார்.

அலுவலர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கறவை மாடு வாங்கி தாருங்கள் என்று தெரிவித்தார், இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கறவை பசு வாங்க ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்தப் பணியை அப்பகுதியினர் பலரும் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details