தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கொரநாட்டுக் கருப்பூர் விநாயகர் கோயில். இந்தக் கோயிலின் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதையடுத்து, உண்டியலை திருடியவர்களை கண்டிபிடிக்க வலியுறுத்தி கோயில் நிர்வாகத்தினர் தாலுக்கா காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் தாலுக்கா காவல் துறை உதவி ஆய்வாளர் மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.