தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் - Thanjavur District Collector Govindarao

தஞ்சாவூர்: கரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.

distric_collector_news
distric_collector_news

By

Published : Apr 4, 2020, 11:22 PM IST

Updated : Apr 6, 2020, 3:17 PM IST

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், “கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையாக பணி செய்து வருகிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்களும் மருத்துவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் 99 விழுக்காட்டினர் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் நிலையில், ஒரு சிலர் இந்த இக்கட்டான நேரத்திலும் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகளைக் கொண்டு மக்களிடையே உள்ள ஒற்றுமைகளைச் சிதைக்க முயல்கின்றனர்.

இவ்வாறு, மத ரீதியிலான தேவையற்ற கருத்துகள், கரோனா குறித்த வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க:

திருச்சியில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று!

Last Updated : Apr 6, 2020, 3:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details