டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படியில் இன்று, குந்தவை நாச்சியார் கல்லூரியிலுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டடம், வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அங்குச் சென்ற அவர் விடுதியின் சமையற் கூடம், உணவுக் கூடம், மொட்டை மாடி, கழிவறை, நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆய்வுசெய்தார். இதனைத்தொடர்ந்து அவர் இவை அனைத்தையும் சுகாதாரமாக நீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுமாறு சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.