தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் ஒரே நாளில் 138 பேருக்கு கரோனா - தஞ்சாவூரில் கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

தஞ்சாவூர்: மாவட்டத்தில் ஒரேநாளில் 138 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Sep 16, 2020, 8:06 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. அந்த வகையில், இன்று (செப்டம்பர் 16) ஒரேநாளில் 138 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சத்து 19 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 751 நபர்கள் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 964 பேர். 155 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி மாவட்டத்தில் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details