தஞ்சாவூர்: பேராவூரணியில் நலிவடைந்த மூன்று தம்பதிகளுக்கு பேராவூரணி பகுதி சமூக அமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து, மூன்று ஜோடிகளுக்கு தங்கத்தாலி மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று ஜோடிகளுக்கும் சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழங்கி, அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மேலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் திருமணத்திற்கு வந்திருந்த புதுமணத் தம்பதிகளின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை மதிய உணவு அளித்தனர். இதில் கலந்துகொண்ட பேராவூரணி தாசில்தார் தம்பதிகளுக்கு திருக்குறள் பரிசளித்தார்.