தஞ்சாவூர்: தெய்வத் தமிழ் பேரவை சார்பாக நேற்று (ஜூலை 3) காலை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள கோவில் கருவறைகள், யாகம், குடமுழுக்கு அனைத்து இடங்களிலும் தமிழில் பூஜை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்துமதத்திற்கு எதிரான ஈஷா
இந்து சமய அறநிலையத் துறையை கலைத்திட வேண்டும் என போராட்டம் நடத்திய ஈஷா யோகா மையம், சிவ நெறிகளுக்கு எதிராக இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறது. எனவே ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்கி இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
பெண்கள் உள்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை விரைவில் தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.