தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவிகள் தங்களது சொந்த முயற்சியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த தயாரிப்புகளை கண்காட்சிக்காக கொண்டுவந்து வைத்தனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.