தஞ்சாவூர்:பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் கிரிக்கிங்டம் கிரிக்கெட் பயிற்சியகத்தின் புதிய கிளையின் பயிற்சி களம் கும்பகோணத்தில் இன்று(ஆக.27) திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 3வது கிளையான இதை பாராளமன்ற மேலவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் துணை மேயர் ஆகியோர் பேட்டிங் செய்து கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தனர். பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயிற்சி மையமான கிரிக்கிங்டம் சார்பில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்திய அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை மற்றும் வேலூருக்கு அடுத்ததாக தற்போது 3வது கிளையை கும்பகோணத்தில் அமைத்துள்ளனர்.