தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் மீனவர் உடல் மீட்பு! - ramanthapuram fisherman body recovered near kollukkadu in tanjore

ராமநாதபுரம் : மீன் பிடிக்கச் சென்று மாயமான ராமேஸ்வரம் மீனவரின் உடல், தஞ்சை மாவட்டம், கொள்ளுக்காடு மீனவர்களால் மீட்கப்பட்டது.

tni
tni

By

Published : Jun 21, 2020, 12:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மலர் வண்ணன், ரெஜின் பாஸ்கர், ஜேசு, சஜிந்தர் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

ஆனால், இவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பாததால், இவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று முன்தினம் நடத்திய தேடுதல் வேட்டையில், ரெஜின் பாஸ்கரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலை அதே கொள்ளுக்காடு கடற் பகுதியில் மற்றொரு மீனவரான சுஜிந்தர் (வயது19) இன் உடல், தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்நிலையில், மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் அரசு அலுவலர்கள் மெத்தனம் காட்டுவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் இது குறித்து எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டிஇறந்த மீனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : லடாக் எல்லை விவகாரம்: கல்வான் நதியில் பாலம் கட்டும் சீனா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details