தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கோயில்களில் வழிபாடு! - Puratasi last Saturday and devotees pray

தஞ்சாவூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தென்னக திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

temple

By

Published : Oct 12, 2019, 12:30 PM IST

புரட்டாசி மாதத்தில் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை வேண்டி விரதம் இருந்து கடவுளை தரிசிக்கும் முறை கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

இந்நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி செல்வம், ஆயுள், ஆரோக்கியம் வேண்டி தஞ்சை மாவட்டம் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை 4 மணியளவில் விசுவரூப தரிசனம் தொடங்கியது. சிறப்பு மலர் அலங்காரத்தில் உப்பிலியப்பன் பெருமாள் காட்சியளித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details