திருவையாறு அடுத்த திருப்பழனம் மெயின்ரோட்டை சேர்ந்த கணேசன் மகன் பிரகாசம் (55). பால் வியாபாரம் செய்துவரும் இவருக்கு வாசுகி என்ற மனைவியும், பிரியவர்ஷன் (13), பிரியங்கா (16) என்ற குழந்தைகளும் உள்ளனர்.
பிரகாசம் மதியம் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பால் வியாபாரம் செய்ய சென்றுள்ளார். அவர் அம்மன்பேட்டை எம்.ஜி.ஆர். திரையரங்கம் அருகே செல்லும்போது திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் லோடு வண்டி எதிர்பாரத விதமாக பிரகாசத்தின் வாகனத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.