தஞ்சாவூர்:உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மகர சங்கராந்தியையொட்டி, ஒரு டன் எடை கொண்ட காய்கறிகளுடன் நந்தி சிலைக்கு சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் செய்யப்பட்டது.
மகரசங்கராந்தி விழாவையொட்டி (Makar Sankranti festival), உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள (Thanjavur Big Temple) நந்தி சிலைக்கு (Thanjavur Big Temple Nandi Idol) 1000 கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அந்த அலங்காரத்தில் காய்கறிகளுடன் பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றன.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையை (Pongal Festival) முன்னிட்டு, நேற்று இந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப்பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தது. இதனைத்தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று (ஜன.16) அதிகாலையில் பெருவுடையாருக்கும், பெரிய நாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தன.
இதனைத்தொடர்ந்து நெல்லிக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளாலும், லட்டு, ஆரஞ்சு, முறுக்கு, மைசூர்பாகு, அதிரசம் உள்ளிட்ட இனிப்பு வகைகளாலும், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, எலுமிச்சைப்பழம், அன்னாசிப் பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்ட பழ வகைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட்டன. பின், 108 பசுக்களுக்கு பட்டுத்துணி போர்த்தப்பட்டு சந்தனம், குங்குமம் ஆகியவை இடப்பட்டு 'கோ' பூஜையும் (Cow Pooja) நடந்தது.