தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள்" - டிடிவி தினகரன் தாக்கு! - etv bharat

எடப்பாடி பழனிசாமியும், தமிழக முதலமைச்சரும் ஹிட்லருடைய இரண்டு சகோதரர்களாக இருக்கிறார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக முதல்வருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை -டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக முதல்வருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை -டிடிவி தினகரன்

By

Published : Aug 21, 2023, 12:54 PM IST

டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: அதிமுக மாநாடு, எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், "மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு, எழுச்சி மாநாடு அல்ல, பழனிசாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு, கூட்டத்திற்கு அதிகபட்சம் 2 முதல் 2.5 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என அங்குள்ள நிர்வாகிகள், நண்பர்கள் கூறினர்.

புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும், புரட்சித் தமிழர் என்ற பட்டத்திற்கு பதில் துரோகத் தமிழர் என்று பட்டம் வழங்கலாம். காலில் விழுந்து பதவி பெற்றுக்கொண்டது, பதவியில் நீடிக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தது, துரோகத்தாலும், பண பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்து வைத்திருப்பது தான் சாதனை, அதற்கு தான் புரட்சி செய்தார் என்றால் அது வெட்க கேடான செயல்" என்று தெரிவித்தார்.

திமுகவின் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நீட் தேர்வு குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது காமெடியாக உள்ளது. இபிஎஸ் ஆட்சியை எதிர்த்து எதற்கெல்லாம் போராட்டம் நடத்தினாரோ, ஆனால் இன்றைக்கு அவரே ஹிட்லர் மாதிரி அதை நிறைவேற்றுகிறார். கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார்.

மக்கள் அவருக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்ததே தவறு என்கிற கொடூர எண்ணத்தில் செயல்படுகிறார். பழனிச்சாமியும் ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை, இரண்டு பேரும் ஹிட்லருடைய இரண்டு சகோதரர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்று சக்தியாக நிச்சயம் வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

தேர்தலுக்கான கூட்டணியில் யார் வரக்கூடாது, யாரை வர விடக்கூடாது என்பதற்கான தேர்தல், எங்களைப் பொறுத்தவரை தீய சக்தியான திமுக, எந்த விதத்திலும் வெற்றி பெறக் கூடாது. அதற்கான கூட்டணியில் இருக்க தயார், கூட்டணி இல்லையென்றாலும் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்ற ஆணையை மதிக்காமல், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம், அணையை கட்டுவோம் என்று சொல்லி அகம்பாவத்துடன் நடந்து கொள்ளும் போது, அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசுடன் சேர்ந்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:1989ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான்... - உண்மையை உடைத்த மூத்த பத்திரிகையாளர்!

ABOUT THE AUTHOR

...view details