தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதா ஆலயத்தில் கீரிடம், நெக்லஸ் திருட்டு - போலீஸ் வலைவீச்சு!

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா ஆலைய மாதாவின் கீரிடம், நெக்லஸ் உள்ளிட்டவற்றை திருடிய நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

By

Published : Sep 28, 2019, 10:14 PM IST

பூண்டி மாதா

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்கா எனப்படும் புனித தலம் உள்ளது. மாதாவிற்கு தங்கத்தில் கிரீடமும், செபமாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு வழிபாடு முடிந்து ஆலயத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு மறுநாள் காலை திறக்கபடும்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழிபாட்டிற்காக ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது, மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்ட ஆலய பாதுகாவலர் இது குறித்து ஆலயத் தலைவர் பாக்கியசாமி, துணைத் தலைவர் அலபோன்ஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரும் சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்டனர். அப்போது மாதாவின் தலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடமும், கழுத்தில் இருந்த நான்கு பவுன் நெக்லஸூம், கையிலிருந்த மூன்றரை பவுன் தங்க செபமாலையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வாளர் கென்னடி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

பின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் தனி நபர் ஒருவர் கடந்த 26ஆம் தேதி ஆலயத்தில் சந்தேகம்படும் வகையில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. வழிபாட்டின்போது அவர் ஆலயத்தின் உள்ளே புகுந்து பாதிரியார்கள் உடை மாற்றும் அறையில் ஒளிந்ததுகொண்டு மேராக்களை துணி போட்டு மூடியதும் தெளிவாக பதிவாகியிருந்தது.

ஆனால் அந்த நபர் வெளியே செல்லும் காட்சிகள் இல்லை. இதையடுத்து தஞ்சை கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த நபரை தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க: செம்மரக்கட்டையுடன் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details