தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்! - தஞ்சாவூரில் கொழு பொம்மைகள் கொண்டாட்டம்

தஞ்சாவூர்: ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் கொலு கண்காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நவராத்திரி விழா

By

Published : Sep 29, 2019, 8:40 AM IST

கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி தொடங்கியது. இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோயில்களை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்!

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அரசவை தர்பார், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப பொம்மைகள், உள்ளிட்ட பல பொம்மைகள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வியக்க வைத்தது. மேலும் கோயில் முழுவதும் தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details