தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறையான சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவமனை...அவதிப்பட்ட பேரூராட்சி பணியாளர்.. - ratika kumbakonam

தஞ்சாவூர் அருகே அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பேரூராட்சி பணியாளருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சையின்மையால் அவதிப்பட்ட பேரூராட்சி பணியாளர்..
அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சையின்மையால் அவதிப்பட்ட பேரூராட்சி பணியாளர்..

By

Published : Nov 2, 2022, 9:13 AM IST

தஞ்சாவூர்:பாபநாசம் பேரூராட்சியில் தற்காலிக பணியாளரான ராதிகா (31), தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 28ஆம் தேதி பாபநாசம் ஆர்டிபி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தடுமாறி விழுந்த ராதிகாவுக்கு, கால், நெற்றி, மற்றும் கண்களுக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பாபநாசம் அரசு மருத்துவமனையில் ராதிகா சிகிச்சை பெற்றுள்ளார். இங்கு அவருக்கு அவசர அவசரமாக தையல் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் காயம் அடைந்த கண்ணிற்கு கீழ் பகுதி மற்றும் காலிலும் தொடர்ந்து வலி குறையாமலே இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்ட திருகாணி மற்றும் கல்

எனவே இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு காயம்பட்ட பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ரேயில், காலில் அடிபட்ட காயத்திற்குள் கொலுசின் திருகாணி இருப்பதும், கண்ணுக்கு கீழ் பகுதியில் உள்ள காயத்தில் சிறிய கல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது கால் காயத்தில் இருந்த திருகாணியையும், கண்ணுக்கு கீழே இருந்த சிறிய கல்லையும் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து குணமடைந்த ராதிகா, நேற்று (நவ 1) மதியம் கும்பகோணம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இவ்வாறு கவனக்குறைவாக செயல்பட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகுதி வாய்ந்த நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நான் ராமதாஸ் ஆளு... மதுபோதையில் அரசு மருத்துவர் ரகளை... கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்கு...

ABOUT THE AUTHOR

...view details