தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேப்பெருமாநல்லூர் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் எஸ். ராமலிங்கம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். அதனடிப்படையில், இதற்கான பாராட்டு விழா தேப்பெருமாநல்லூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராமலிங்கம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகளை முதலமைச்சர் அறிவித்தாலும், இதுவரை அரசாணை வெளியிடாமலிருப்பது ஏன்? ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் 28 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி, தற்போது 23 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.