தஞ்சாவூர்:தொடர் கனமழையினால் தஞ்சை மாவட்டத்தில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கரம்பயம், காட்டுக்கோட்டை, திருப்பந்துருத்திஆகியபாதிக்கப்பட்ட பகுதிகளை அன்பில் மகேஷ் ஆய்வுசெய்தார். மேலும் அங்கு பயிரிடப்பட்டு வெள்ளத்தால் சேதமடைந்த சம்பா, தாளடி பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து பேசிய விவசாயிகள், "தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய கனமழை இந்த ஆண்டு பெய்துள்ளது. இதில் 60 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதால், சுமார் ஏழாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.