தஞ்சாவூர்:பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் பயணிக்கும் ஆண்டில் வரும் மாசி மாதத்தில் மக நட்சத்திரமும் பௌர்ணமி தினமும் இணைந்த நன்நாளில் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தாண்டு நடக்கிறது. இதையடுத்து வருகிற 2028ஆம் ஆண்டு நடைபெறும். இந்த விழா கும்பகோணம் மாநகரில் உள்ள பன்னிரண்டு சைவத்திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ தலங்களுடன் இணைந்து ஒருசேர நடைபெறும்.
இவ்வாண்டிற்காண மாசிமக பெருவிழாவின் தொடக்கமாக, இன்று காலை காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலிலும், அதனை தொடர்ந்து நண்பகல் ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் என்று 5 கோயில்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மொத்தம் ஆறு சைவத்திருத்தலங்களில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. எஞ்சிய திருத்தலங்களில் ஏகதின உற்சவமாக மார்ச் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாசி மகத்தன்று மட்டும் விழா நடைபெறுகிறது.