தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2021, 9:38 AM IST

ETV Bharat / state

லஞ்சம் வாங்கி ஏமாற்றிவிட்டீர்கள் - காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களைத் திட்டிய நபர்

மணல் கடத்தலுக்கு காவலர்கள் துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் பகிரங்கமாக காவல் நிலையம் முன்பு காணொலியாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இளையராஜா
இளையராஜா

தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லுார் வடக்குத்தெரு சேர்ந்தவர் சுப்புராயன் மகன் இளையராஜா (34). இவர் அப்பகுதியிலுள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தியதாக இவருக்குச் சொந்தமான மூன்று டிராக்டர்களை, பந்தநல்லுார் காவல் துறையினர் மணல் கடத்தியாகப் பறிமுதல்செய்தனர்.

பந்தநல்லூர் மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்த இளையராஜா, தனக்குச் சொந்தமான வாகனத்தைப் பறிமுதல்செய்ததை அறிந்து பந்தநல்லுார் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு காவல் நிலையத்தில், ஒரு பெண் காவலரைத் தவிர ஆய்வாளர், மற்ற காவலர் இல்லாததால், தனது செல்போனில் செல்ஃபி கேமரா மூலம் காணொலி எடுத்தபடி காவலர்களைச் சரமாரியாகத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.

"மணல் திருடுவதற்குப் பணம் வாங்கிய காவலர்கள் அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன். எல்லாம் திருட்டு பயலுக. எனக்கு கரோனா உள்ளது. என்னைத் தொட முடியாது தொட்டால் செத்தான் அவன்.

எவ்வளவு திமிர் இருந்தால் என்னை வீட்டு காசை லட்சம் லட்சமாகத் தின்றுவிட்டு, என்னோட வாகனத்தைச் பறிமுதல் செய்வீர்களா, அவ்வளவு திமிரா உங்களுக்கு. இன்ஸ்பெக்டர் எங்கே, யாருமே இல்லையா காசு மட்டும் வாங்க தெரிகிறது என ஆரம்பித்து தகாத வார்த்தைகளில் பந்தநல்லுார் காவல் நிலையத்திற்கு முன் பேசி, வாட்ஸ்அப்பில் வெளியிட்டார்.

லஞ்சம் வாங்கி ஏமாற்றிவிட்டீர்கள்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய சந்தானம் மேடை கடந்த வாரம் நாகை மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

தற்போது பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு இட மாறுதல் செய்யப்பட்ட ஆய்வாளர் இதுவரை பொறுப்பு ஏற்காததால் திருப்பனந்தாள் ஆய்வாளர் முத்துக்குமார் கூடுதல் பொறுப்பாகக் கவனித்துவருகிறார்.

இதையடுத்து, பந்தநல்லுார் ஆய்வாளர் (பொறுப்பு) முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடிவருகின்றார்.

மணல் கடத்தலுக்கு காவலர்கள் கையூட்டு வாங்குவதை, அந்த காவல் நிலையம் முன்பு, மணல் கடத்தும் நபரே தைரியமாக, காணொலியாக எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கையூட்டு வாங்கிய காவலர்கள் கலக்கத்தில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் தயாரிப்பில் விதிமுறைகள் மீறல்: மாணவர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details